கர்நாடக மாநில ஆளுநருக்கு கொரோனா தொற்று

கர்நாடக மாநில ஆளுநருக்கு கொரோனா தொற்று

கர்நாடக மாநில ஆளுநராக பதவி வகித்து வருபவர் தாவர்சந்த் கெலாட்.

இந்நிலையில், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார் என ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவரது உடல்நிலை சீராக உள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள், சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This