வடக்கில் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – ஜனாதிபதி

வடக்கில் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – ஜனாதிபதி

வடக்கில் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கு மாகாணத்தில் காணி விடுவிப்பு செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காணி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, பலாலி விமான நிலையம் மற்றும் பாதுகாப்பு துறைக்கு தேவையான காணிகள் தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் இறுதி தீர்மானத்தை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This