அநுர அரசாங்கத்தால் சலிப்படைந்த மக்கள் மீண்டும் ரணிலைக் கேட்பார்கள்! ராஜித தெரிவிப்பு

அநுர அரசாங்கத்தால் சலிப்படைந்த மக்கள் மீண்டும் ரணிலைக் கேட்பார்கள்! ராஜித தெரிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி போன்றவற்றில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் பின்னர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது. திசைகாட்டியிலும் நெருக்கடிகள் உள்ளன.

வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இந்த நெருக்கடி முடிவுக்கு வரும்.

இந்த அரசாங்கத்தால் சலிப்படைந்த மக்கள் மீண்டும் ரணிலைக் கேட்பார்கள். என்றார்.

CATEGORIES
Share This