பெண் வைத்தியர் படுகொலை விவகாரம் – வைத்தியர்கள் உண்ணாவிரத போராட்டம்!

பெண் வைத்தியர் படுகொலை விவகாரம் – வைத்தியர்கள் உண்ணாவிரத போராட்டம்!

இந்தியா மேற்கு வங்கத்தில் பெண் வைத்தியர் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் உள்ளாக்கியிருந்தது.

இந்த நிலையில் குறித்த பெண் வைத்தியர் கொலைக்கு நீதி கோரி ஏனைய வைத்தியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அங்கு நோயாளிகள் பாதிக்கப்படுவதாக கூறிய மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு, வைத்தியர் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

அதன்படி, பணி செய்யும் இடங்களில் சி.சி.டி.வி. கேமரா உள்பட பாதுகாப்புகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்பட 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஒப்புக்கொண்டார்.

எனினும் வைத்தியர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை அரசு ஒப்புக்கொண்டபடி செயல்படுத்தவில்லை எனக்கூறி வைத்தியர்கள் கடந்த முதலாம் திகதி முதல் மீண்டும் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தங்கள் முன்வைத்த கோரிக்கையை 24 மணி நேரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும், இல்லையெனில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள வைத்திதயர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், அரசிடமிருந்து எந்த பதிலும் வரை வில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், வைத்தியர்கள் நேற்று நள்ளிரவு முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
Share This