கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவிய சீனா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவிய சீனா!

பசிபிக் பெருங்கடலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததாக சீனா அறிவித்துள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட கடல் பகுதிகளில் ஏவுகணை வெற்றிகரமாக விழுந்தது என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

இது சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச நடைமுறைக்கு ஏற்ப சோதனை செய்யப்பட்டுள்ள மற்றும் எந்த நாட்டிற்கும் அல்லது இலக்கிற்கும் எதிராக இயக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியது.

எனினும், ஜப்பான் சோதனை ஏவுதல் குறித்து எந்த அறிவிப்பும் தம்மிடம் பெறவில்லை என்று கூறியது.

1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனா சர்வதேச கடல் பகுதியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவுவது இதுவே முதல் முறை என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

CATEGORIES
Share This