வடகொரிய வெள்ளப் பேரிடர்; கடமை தவறிய 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை

வடகொரிய வெள்ளப் பேரிடர்; கடமை தவறிய 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை

வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 1000 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய ஊழல் மற்றும் கடமை தவறிய அரச அதிகாரிகள் 30 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த இயற்கை அனர்த்தத்தால் 4,100 வீடுகள், 7,410 விவசாய நிலங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

வடகொரியாவின் வடமேற்கு பகுதிகளில் உள்ள நகரங்களின் அதிக சேதங்கள் ஏற்பட்டன.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் அந்த இடங்களை மீண்டும் கட்டியெழுப்ப பல மாதங்கள் ஆகும் என்றார்.

மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட 15,400 பேருக்கு தலைநகர் பியோங்யாங்கில் அரசாங்கம் தற்காலிக தங்குமிடம் வழங்கியுள்ளது.

உரிய நடவடிக்கைள் எடுக்கத் தவறிய அதிகாரிகளைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், அவரின் உத்தரவுக்கமைய கடந்த மாத இறுதியில் ஊழல் மற்றும் கடமை தவறிய அரச அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்கொரிய ஊடகங்களே இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளன.முன்னதாக வட கொரியாவில் வெள்ளத்தில் அதிக மக்கள் உயிரிழந்துள்ளதை மறுத்த கிம் ஜாங் உன் இவை வட கொரியாவின் சர்வதேச பிம்பத்தைச் சிதைக்கத் தென் கொரியா பரப்பும் வதந்திகள் என்று மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This