அநுரவின் வெற்றி நாட்டு மக்களின் வெற்றி!

அநுரவின் வெற்றி நாட்டு மக்களின் வெற்றி!

”எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க வெற்றியீட்டுவார். அவரது வெற்றி இந்த நாட்டு மக்களின் வெற்றியாகக் கருதப்படும்” என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கருத்துத் தெரிவிக்கையில்“ தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மக்கள் அமோக வெற்றியீட்டும்.

நாட்டு மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நாட்டை வீழ்ச்சிப்பாதைக்கு இட்டுச்சென்றவர்களே இன்று மீண்டும் ஆட்சியமைக்கும் கனவில் உள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இந்த நாட்டில் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படும்.

அனுரகுமார திசாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்கும் போது நாடு அபிவிருத்தி அடையும்.

நாட்டு மக்கள் வளமான வாழ்க்கை வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும். நாட்டை வெற்றியடையச் செய்வதற்காகவே அனுரகுமார தேர்தலில் போட்டியிடுகின்றார். செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் அநுரகுமார் திசாநாயக்க வெற்றிபெறுவார். அது இந்த நாட்டுமக்களின் வெற்றியாகும்” இவ்வாறு விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This