பீகார் மாநில கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

பீகார் மாநில கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

இந்தியா, பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள கோயில் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.பீகார் மாநிலம், ஜெகனாபாத் மாவட்டம் மக்தூம்பூர் பகுதியிலுள்ள வானவாரில் அமைந்துள்ள பாபா சித்தேஷ்வர்நாத் கோவிலிலேயே இச் சம்பவம் நடந்துள்ளது.

பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தினால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் மரணத்தையும் அரச நிர்வாகம் உறுதி செய்துள்ளதோடு, மேலும் சிலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

CATEGORIES
Share This