சமல், சசீந்திர ரணிலுக்கு ஆதரவு; ராஜபக்ச குடும்பத்துக்குள் விரிசல்

சமல், சசீந்திர ரணிலுக்கு ஆதரவு; ராஜபக்ச குடும்பத்துக்குள் விரிசல்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொதுஜனபெரமுன எடுத்துள்ள தீர்மானம் காரணமாக ராஜபக்ச குடும்பத்திற்குள் கருத்துவேறுபாடுகள் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மகிந்த ராஜபக்ச குடும்பத்தவர்கள் உட்பட ராஜபக்ச குடும்பத்தவர்கள் பலர் ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.

முன்னாள் சபாநாயகர் சமல்ராஜபக்சவும், இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்சவும் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதுடன் அவருக்கே கட்சி ஆதரவளிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த ராஜபக்சவின் ஏனைய புதல்வர்களும் இதேநிலைப்பாட்டை கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

யோசித ரோகிதவின் சந்தைப்படுத்தல் நிறுவனத்தை சேர்ந்த குழுவிடம் ரணில்விக்கிரமசிங்கவின் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் நாமல் ராஜபக்ச கட்சி தனது சொந்த வேட்பாளரை களமிறக்கவேண்டும் என்பதில் உறுதியாக காணப்படுகின்றார்.

CATEGORIES
Share This