பிரிட்டன் கலவரம்: பாதுகாப்பு அதிகரிப்பு!

பிரிட்டன் கலவரம்: பாதுகாப்பு அதிகரிப்பு!

பிரிட்டனில் வெளிநாட்டு அகதிகளுக்கு எதிராக தீவிர வலதுசாரி அமைப்பினா் கலவரத்தில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்துவதற்காக முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரிட்டனில் வெளிநாட்டு அகதிகளுக்கு எதிராக தீவிர வலதுசாரி அமைப்பினா் கலவரத்தில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்துவதற்காக முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் பல்வேறு நகங்களில் குடியேற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வலதுசாரிகள் கடந்த வாரம் நடத்திய போராட்டம் கலவரமாக உருவெடுத்தது. வன்முறையில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், புதிய ஆா்ப்பாட்டக் கூட்டங்களுக்கு வலதுசாரி அமைப்பினா் அழைப்பு விடுத்துள்ளதால் மீண்டும் கலவரம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான போலீஸாா் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

குடியேற்றங்களுக்கு ஆதரவான வழக்குரைஞா்கள் மற்றும் அவா்களது இல்லங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This