பிரான்ஸில் திருமண நிகழ்வில் புகுந்து சரமாரி தாக்குதல்!

பிரான்ஸில் திருமண நிகழ்வில் புகுந்து சரமாரி தாக்குதல்!

பிரான்ஸில் 30 பேர் கொண்ட குழு ஒன்று திருமண நிகழ்வு ஒன்றுக்குள் நுழைந்து, அங்கிருப்பர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜூலை 27, சனிக்கிழமை இரவு இச்சம்பவம் Épinay-sur-Seine (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. திருமண நிகழ்வொன்றின் போது திடீரென உள்நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த பலர் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.

அங்கு வந்த குழுவினர் இரும்பு கம்பிகளினால் இந்த தாக்குதலை மேற்கொண்ட நிலையில் திருமணத்துக்கு வருகை தந்த விருந்தினர்களும் தாக்குதலுக்கு இலக்கானதாக பொலிஸார் கூறுகின்றனர்.

அதையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர். விரைந்து சென்ற பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பி ஓடிய நிலையில் ஐவரை பொலிஸார் கைது செய்தனர்.
சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்

CATEGORIES
Share This