ரணிலை ஆதரிக்க வேண்டும்: மகிந்தவுக்கு அழுத்தம்

ரணிலை ஆதரிக்க வேண்டும்: மகிந்தவுக்கு அழுத்தம்

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதியுயர் தலைவருமான மஹிந்த ராஜபக்சவை, ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோர் விஜேராமவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் ஆதரவைப் பெறுவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவை வழங்க வேண்டுமென சாகல ரத்நாயக்க மற்றும் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோர் மகிந்த ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இதற்கு எதிர்வரும் திங்கட்கிழமை அரசியல் உயர்பீடத்துடன் கலந்துரையாடி தனது முடிவை அறிவிப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This