திருமணம் முடிந்த 3 நிமிடத்தில் விவாகரத்து… ஏன் தெரியுமா?

திருமணம் முடிந்த 3 நிமிடத்தில் விவாகரத்து… ஏன் தெரியுமா?

குவைத் நாட்டில் இந்த வினோத சம்பவம் நடந்தது. திருமணம் முடிந்த 3 நிமிடத்தில் விவாகரத்தும் நடந்து முடிந்தது.

எல்லா எதிர்பார்ப்புகளுடனும் அந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது. திருமண நிகழ்ச்சிகள் முடிந்து வீட்டிற்கு புறப்பட தயாரானபோது, மணமகள் கால் இடறி கீழே விழுந்தார். அப்போது மணமகன், ‘பார்த்து நடக்கத்தெரியாதா முட்டாள்’ என்று திட்டிவிட்டார். இதனால் மணப்பெண் மனம் உடைந்தார். காலமெல்லாம் இவருடன் எப்படி வாழப்போகிறோம் என்று அதிர்ச்சி அடைந்தார்.

உடனே கோர்ட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி தங்களை பிரித்துவைத்துவிடும்படி கோரிக்கை விடுத்தார். கோர்ட்டும் அவரது கோரிக்கையை ஏற்று திருமண பந்தத்தை ரத்து செய்து விவாகரத்து கொடுத்தது. இது அந்த நாட்டில் நடந்து முடிந்த மிக குறுகலான குடும்ப பந்தம் என்று கூறப்படுகிறது. இதுபற்றிய செய்தி எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. “மரியாதையற்ற உறவுகள் ஆரம்பத்திலேயே முடிவடைந்துவிடும்” என்று ஒரு பயனர் எழுதினார்.

2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு திருமணம், 90 நிமிடத்தில் விவாகரத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This