எந்த ஒரு சதியாலும் தேர்தலை பிற்போட முடியாது – அநுர குமார

எந்த ஒரு சதியாலும் தேர்தலை பிற்போட முடியாது – அநுர குமார

அரசியலமைப்புக்கு முரணாக எவ்வாறான சதிகளை மேற்கொண்டாலும், ஜனாதிபதித் தேர்தலைத் தடுக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ளை பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
ஜனாதிபதித் தேர்தலைத் தடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்வேறு வகையில் சூழ்ச்சியில் இறங்கியுள்ளதாக அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் சிலர் நீதிமன்றில் மனுக்களைத் தாக்கல் செய்கின்றனர். எவ்வாறாயினும் அனைத்து சதிகளும் தோற்கடிக்கப்பட்டு இறுதியில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற அறிவிப்பே வரும். எதிர்வரும் 17ஆம் திகதியுடன் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும். அதன்பின்னர் வேட்பு மனுத்தாக்கலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும். அதன்பின்னர் ஐந்து அல்லது ஆறு வாரங்களில் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். குறிப்பாக ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This