முகத்துவாரம் பகுதியில் முதலைகளால் மக்கள் பீதி !

முகத்துவாரம் பகுதியில் முதலைகளால் மக்கள் பீதி !

கொழும்பு 15, முகத்துவாரம் பகுதியில் வசிப்பவர்களிடையே முதலைகள் பரவலான பீதியை ஏற்படுத்தியுள்ளன. முதலைகள் சிற்றோடையின் நீரோட்டங்களைச் சுற்றி வருவதையும் கால்வாயில் சுற்றித் திரிவதையும் காண முடிவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .

இதுகுறித்து பிரதேச மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தாம் அச்சத்தில் வாழ்வதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .

“எங்கள் பாதுகாப்பு குறித்து நாங்கள் பயப்படுகிறோம், எங்கள் உயிருக்கு ஏதேனும் தீங்கு ஏற்படும் முன் இந்த முதலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
Share This