90-ஸ் கிட்ஸ்களின் ஹீரோ: WWE போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஜோன்சீனா

90-ஸ் கிட்ஸ்களின் ஹீரோ: WWE போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஜோன்சீனா

WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க ரசிகர்களை கொண்டவர் ஜோன்சீனா. இவரின் பெயரை கேட்டாலே, 90-ஸ் கிட்ஸ் மனங்களில் மகிழ்ச்சி ஏற்படும் என்றே கூறலாம். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைல் மிகவும் பிரபலம் ஆகும்.

16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோன்சீனா WWE போட்டிகளால் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கனடா நாட்டின் டொரோண்டோவில் நடைபெற்ற ‘மணி இன் தி பேங்க்’ (Money in the Bank) போட்டியில் திடீரென தோன்றிய ஜோன்சீனா தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அவர் ஓய்வு பெறவுள்ளார்.

47 வயதாகும் ஜோன்சீனா ஓய்வு அறிவிப்பை தெரிவிக்கும்போது சுற்றியிருந்த கூட்டத்தினர் ஓய்வு பெறவேண்டாம் என்று கூச்சலிட்டனர்.

2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ரோயல் ரம்பிள், எலிமினேஷன் சேம்பர் மற்றும் ரெஸில்மேனியா 41 இல் தான் போட்டியிட போவதாகவும் இந்த போட்டிகளோடு WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போகிறேன் என்று ஜோன்சீனா அறிவித்தார்.
மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹொலிவுட் திரைப்படங்களிலும் ஜோன்சீனா நடித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஒஸ்கார் விழாவில், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை அறிவிக்க ஆடை இல்லாமல் ஜோன்சீனா மேடை ஏறியது பெரும் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This