விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினர் மர்மமான முறையில் உயிரிழப்பு; பிரேத பரிசோதனையை அடுத்து விசாரணை

விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினர் மர்மமான முறையில் உயிரிழப்பு; பிரேத பரிசோதனையை அடுத்து விசாரணை

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் வசித்து வந்த விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம் குமார் வயது-42 என்ற குடும்பஸ்தரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு அடம்பன் வீதியில் உள்ள தனது வீட்டிற்கு முன் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்துள்ளார். இதன்போது தன்னை வாகனத்தால் மோதி விட்டுச் சென்று விட்டனர் என சத்தம் போட்டுள்ளார்.

அதனையடுத்து குடும்பத்தினரின் உதவியுடன் உடனடியாக அடம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சடல பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என தெரிவிக்கப்படுகின்றது.

கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம்குமார் ஒரு கால் மற்றும் ஒரு கையையும் இழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This