நாடாளுமன்றிற்கு எடுத்துச் செல்லப்படும் சம்பந்தனின் பூதவுடல்: இறுதி கிரியைகள் விபரம் வருமாறு

நாடாளுமன்றிற்கு எடுத்துச் செல்லப்படும் சம்பந்தனின் பூதவுடல்: இறுதி கிரியைகள் விபரம் வருமாறு

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தனின் பூதவுடல் எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்துக்கு அஞ்சலிக்காக வைக்கப்படும் என நாடாளுமன்ற விவகாரக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் 2.00மணிமுதல் மாலை 04.00மணிவரை பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி கிரியைகள்

இறுதிக் கிரியைகள் திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அனைத்து பணிப்புரைகளையும் பிரதமர் தினேஷ் குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

அன்னாரது பூதவுடல் பொரள்ளையிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில் மக்கள் அஞ்சலிக்காக நாளை(02) வைக்கப்படவுள்ளது.

நாளை (02) நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ள நிலையில், நாளை மறுதினம் (03) நாடாளுமன்றம் கூடாதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This