3 பேரின் உயிரைப் பறித்த டெல்லி விமான நிலைய மேற்கூரை!

3 பேரின் உயிரைப் பறித்த டெல்லி விமான நிலைய மேற்கூரை!

டெல்லியில் பெய்து வரும் கன மழை காரணமாக, வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக டெல்லி முழுவதிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1இல் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக அங்கிருந்த கார்கள், பலத்த சேதத்துக்கு உள்ளாகின.

வாகனங்களுக்குள் சிக்குண்டவர்களை தீயணைப்புப் படையினர் மீட்டதோடு,காயமடைந்தவர்களை மருத்துவனைக்கும் கொண்டு சென்றனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஒருவர் உயிரிழந்தார். மீதமுள்ள 6 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இவ் விபத்தில் மேலும் இருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக மறு அறிவித்தல் வரும் வரையில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This