நீட் தேர்வை இரத்து செய்யக்கோரி வீதியில் பணத்தாள்களை வீசியெறிந்து போராட்டம் !

நீட் தேர்வை இரத்து செய்யக்கோரி வீதியில் பணத்தாள்களை வீசியெறிந்து போராட்டம் !

நீட் தேர்வில் நடந்து வரும் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர்ந்தும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நீட் மற்றும் யுஜிசி நெட் ஆகிய தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டிக்கும் விதமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வீட்டுக்கு வெளியில் பணத் தாள்களை வீசி காங்கிரஸ் கட்சியினர் இன்று வியாழக்கிழமையன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.

நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக டெல்லியிலுள்ள அவரது வீட்டுக்கு வெளியில் காங்கிரஸ் மாணவப் பிரிவினர் பணத்தாள்களை வீதிகளில் வீசி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சிறிது நேரத்திலேயே அங்கு விரைந்த பொலிஸார் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This