பொதுத் தேர்தலுக்கு அவசரம் இல்லை

பொதுத் தேர்தலுக்கு அவசரம் இல்லை

அரசாங்க திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், தேர்தல் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

அவசரமாக பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படாது. இந்த வருடத்தில் நடத்த வேண்டிய தேவையும் கிடையாது. ஆனால் அடுத்த வருடத்தில் அரசியலமைப்புக்கமைய அந்தத் தேர்தல் நடக்கும். எவ்வாறாயினும் அரசியலமைப்புக்கமைய இந்த வருடத்தில் நடக்க வேண்டிய ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் என்பதனை ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்றார்.

CATEGORIES
Share This