முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகேந்திரனுக்கு அஞ்சலி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகேந்திரனுக்கு அஞ்சலி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகர் கனகசபாபதி கனகேந்திரனுக்கு  (ஈழவேந்தன்)  அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (05) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அமைந்துள்ள அலுவலகத்தில்  இடம் பெற்றது. 

 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கணேந்திரனின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா க​ஜேந்திரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் .

CATEGORIES
Share This