EPAPER
வெல்லவாய பகுதியில் வர்த்தக நிலையங்கள் அகற்றப்பட்டமையால் அமைதியின்மை

வெல்லவாய பகுதியில் வர்த்தக நிலையங்கள் அகற்றப்பட்டமையால் அமைதியின்மை

குறித்த பகுதியில், 15 வருடங்களாக நடத்தி வந்த, வர்த்தக நிலையங்களை திடீரென அகற்றியமையாலேயே அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

எல்ல – வெல்லவாய வீதியின் இருபுறங்களிலும் காணப்படும் பல வர்த்தக நிலையங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் அப்புறப்படுத்த முற்பட்டதால் அந்த பகுதிகளில் அமைதியின்மை ஏற்பட்டது.

அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 70 வர்த்தக நிலையங்களே இவ்வாறு அகற்றப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வர்த்தக நிலையங்களை திடீரென அகற்றியதன் காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக வரத்தக நிலையங்களின் உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்

CATEGORIES
Share This