போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கிளிநொச்சியில் கைது

போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கிளிநொச்சியில் கைது

கிளிநொச்சியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநகர் பகுதியில் நேற்றையதினம்(26) கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வீடொன்றில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த  ஐந்து கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன்  சந்தேக நபரான பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட பெண்ணை இன்றையதினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

CATEGORIES
Share This