மத்தள விமான நிலையத்தின் நிர்வாக அதிகாரம் இந்தியா, ரஷ்யா வசமானது

மத்தள விமான நிலையத்தின் நிர்வாக அதிகாரம் இந்தியா, ரஷ்யா வசமானது

மத்தள விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியாவின் m/s shaurya aeronautics (Ptv) Ltd மற்றும் ரஷ்யாவின் airport of regoins management company நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, இந்த விமான நிலையத்தின் நிர்வாகம் முப்பது ஆண்டுகளுக்கு இந்த இரு நாடுகளின் நிறுவனங்களுக்கு மாற்றப்பட உள்ளது.

விமான நிலைய நிர்வாகத்துக்காக ஐந்து நிறுவனங்கள் தங்கள் யோசனைகளை ஏலத்தில் சமர்ப்பித்திருந்தன.

அதில் இந்தியா மற்றும் ரஷ்யாவின் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம், விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவினால் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதற்கு அனுமதியும் கிடைக்கப்பெற்றது.

CATEGORIES
Share This