விவாதத்திற்கு தயார்; ஆனால் திகதியில் மாற்றம்

விவாதத்திற்கு தயார்; ஆனால் திகதியில் மாற்றம்

பொருளாதார விவகாரங்களில் இரு கட்சிகளின் கொள்கைகள் குறித்து தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் முன்மொழியப்பட்ட விவாதத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச தயாராக இருப்பதாகவும் ஆனால் அது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸவால் குறிக்கப்பட்ட திகதியில் நடைபெறாது மாறாக மே மாதத்திலேயே நடைபெறும் என ஐக்கிய மக்கள் சக்தி நேற்று தெரிவித்துள்ளது.

மே 7, 9, 13 அல்லது 14 ஆம் திகதியில் தேசிய மக்கள் சக்தி தலைவர் தயாராக இருப்பதாக கலாநிதி ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

எனினும் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஒரு அறிக்கையில், திரு பிரேமதாச அந்நாட்களில் பெண்கள் மாநாடு மற்றும் விவசாயிகள் மாநாட்டில் கலந்த கொள்ளவுள்ளவுள்ளதால் விவாதத்தில் பங்கேற்க முடியாது எனவும் தெரிவித்தார்.

திரு. பிரேமதாசவும் ஒரு பொதுக் கூட்டத்தில், தேசிய மக்கள் சக்தி உடன் மே மாதம் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார், ஆனால் கலாநிதி ஜயதிஸ்ஸ முன்மொழிந்த நாட்களில் அல்ல.

“நாம் இரண்டு விவாதங்களை நடத்த வேண்டும், அதில் ஒன்று இரு கட்சிகளின் தலைவர்களிடையேயும் மற்றொன்று இரு கட்சிகளின் பொருளாதார நிபுணர் குழுக்களிடையேயும் அடங்கும்,” என்று அவர் கூறியமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This