யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!

யாழ்ப்பாணம் செம்மணி வளைவு பகுதியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்களை, அமைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் துறைசார் அதிகாரிகளும் நேற்று (12) காலை குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.  செம்மணி வளைவு பகுதியை அண்டிய நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட மைதானத்தை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வைத்துள்ளது.  

இந்நிலையில் அதற்கான அனுமதியை கோரி யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்கு அந்த அதிகார சபை திட்ட முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.  

CATEGORIES
TAGS
Share This