யாழில் 106 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரம்!

யாழில் 106 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரம்!

யாழ்.மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 106 பயனாளிகளுக்கு அறுதி உறுதிப்பத்திரம் வழங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது நேற்று (09) காலை10 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

இதன்போது மேலதிகமாக 20 பயனாளிகளுக்கு வீடமைப்பு கடனுக்கான முதற்கட்ட காசோலையும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, உப தலைவர் லக்ஷ்மன் குணவர்தன, யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) கே.ஸ்ரீமோகனன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துக்கொண்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This