வைத்தியசாலை பணியாளர் மீது தாக்குதல்!

வைத்தியசாலை பணியாளர் மீது தாக்குதல்!

யாழ் புங்குடுதீவு வைத்தியசாலை பணியாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிகட்டுவான் இறங்குதுறையில் வைத்து, இருவர் அவர் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

நயினாதீவில் வசிக்கும் குறித்த பணியாளார் நேற்று ஞாயிற்றுக்கிழமை , நயினாதீவில் இருந்து, படகில் குறிகட்டுவான் இறங்குதுறையில் வந்து இறங்கிய வேளை, அங்கு காத்திருந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடற்படையினர் , பொதுமக்கள் பார்த்திருக்க இருவரும் பணியாளர் மீது சரமாரியாக தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவத்தில் தாக்குதலில் காயமடைந்த பணியாளர் சிகிச்சைக்காக யாழ். போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This