ஹரியாணா முதல்வராக பதவியேற்றார் நயாப் சைனி!

ஹரியாணா முதல்வராக பதவியேற்றார் நயாப் சைனி!

ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் கட்டர் இன்று காலை ராஜிநாமா செய்த நிலையில், அம்மாநில பாஜக தலைவரும், எம்பியுமான நயாப் சிங் சைனி புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

மக்களவைத் தேர்தலில் மனோகர் லால் கட்டரை கர்னல் தொகுதியில் களமிறக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி – ஜனநாயக ஜனதா் கட்சி கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை காலை தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர்.

கூட்டணி முறிவு மற்றும் மனோகர் லால் கட்டர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட திட்டம் என்ற செய்திகள் நேற்று முதலே வெளியாகிவந்த நிலையில், மனோகர் லால் கட்டர் மற்றும் அவரது அமைச்சர்கள் இன்று மாநில ஆளுநரிடம் தங்களது ராஜிநாமா கடிதத்தை அளித்தனர்.

ஹரியாணாவில் ஆட்சி அமைக்க 46 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜகவிடம் 41 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதால், 7 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவை பாஜக கோரியது.

இதனைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 7 சுயேச்சைகளும் பங்கேற்ற நிலையில், புதிய முதல்வராக பாஜகவின் மாநிலத் தலைவர் நயாப் சிங் சைனியை தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஹரியாணா ஆளுநர் மாளிகையில் மாநிலத்தின் புதிய முதல்வராக சைனி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் மனோகர் கட்டார், பாஜக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். கூட்டணியை முறித்த ஜனநாயக ஜனதா் கட்சியின் 4 எம்எல்ஏக்களும் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This