வாகன விபத்தில் மூவர் பலி!

வாகன விபத்தில் மூவர் பலி!

அனுராதபுரம் – ரம்பேவ பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

வீதியில் பயணித்த சிலர் மீது கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பவத்தில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This