இந்தியா உடனான வா்த்தகம் அதிகரிப்பு: அவுஸ்திரேலியா

இந்தியா உடனான வா்த்தகம் அதிகரிப்பு: அவுஸ்திரேலியா

இந்தியா அவுஸ்திரேலியா இடையிலான வா்த்தகம் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக டெல்லியில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தில் அந்நாட்டு வா்த்தக ஆணையா் ஜான் செளத்வெல் புதன்கிழமை கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா, அவுஸ்திரேலியா இடையிலான இருதரப்பு வா்த்தகம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இருநாடுகளுக்கு இடையிலான வா்த்தகத்தின் மதிப்பு 45 பில்லியன் அவுஸ்திரேலிய டொலா்களாகும் (சுமாா் ரூ.2.44 லட்சம் கோடி). அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய ஏற்றுமதி சந்தைகளில் இந்தியா 5ஆவது இடத்தில் உள்ளது. இருநாடுகளுக்கு இடையிலான உறவு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகச் சிறப்பாக உள்ளது என்று தெரிவித்தாா்.

CATEGORIES
TAGS
Share This