தும்புத்தடியால் ஆசிரியர் தாக்கியதில் மூன்று மாணவர்கள் காயம்!

தும்புத்தடியால் ஆசிரியர் தாக்கியதில் மூன்று மாணவர்கள் காயம்!

பாதுக்க பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் மூன்று மாணவர்களை தும்புத்தடியின் கைப்பிடியால் தாக்கியதில் மூவரும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்ற இருவரின் உடல்நிலையில் முன்னேற்றம்டைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த மூன்று மாணவர்கள் உட்பட 7 மாணவர்கள் பாடசாலையின் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றிருந்த வேளையில் குறித்த மாணவர்களின் வகுப்புக்குப் பொறுப்பான ஆசிரியர் இந்த மூன்று மாணவர்களையும் தாக்கியதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This