தமிழரசுக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் சந்திப்பு இன்று!

தமிழரசுக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் சந்திப்பு இன்று!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டிற்கு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ள நிலையில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (23) திட்டமிட்டவாறு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் தேசிய மாநாட்டிற்கு தடைகோரி, திருகோணமலை மற்றும் யாழ் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை கட்சிக்குள் உள்ள உள்ளக முரண்பாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கட்சியின் உள்ளக முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற் குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சியிலுள்ள அறிவகத்தில் இடம்பெறவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This