மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; ஒருவர் கைது!

மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; ஒருவர் கைது!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முனைக்காடு களப்பு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை நேற்று திங்கட்கிழமை (19) பொலிஸார் முற்றுகை இட்டனர்.

இதன்போது, 150 போத்தல் கசிப்புடன்  ஒருவரை கைது செய்ததுடன், 3 இலட்சத்து 50 ஆயிரம் மில்லி மீற்றர் கோடா, உற்பத்தி உபகரணங்கள் மற்றும் மோட்டர் சைக்கிள் ஒன்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This