வாக்காளர் இடாப்பில் பெப்ரவரி 29 இற்கு முன் பெயர்களைப் பதிவு செய்க! – தேர்தல் ஆணைக்குழு

வாக்காளர் இடாப்பில் பெப்ரவரி 29 இற்கு முன் பெயர்களைப் பதிவு செய்க! – தேர்தல் ஆணைக்குழு

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில், தாமதமின்றி பெயர்களைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிரந்தர வதிவிடத்தை மாற்றாது, திருமணம், கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வசிப்பிடத்தை மாற்றிய அனைவரும் வாக்காளர் இடாப்பில் தமது பெயரைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் பட்சத்தில், அவர்களுக்கு வாக்களிக்க முடியாவிட்டாலும் அவர்களது பெயர்களும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This