மாவனெல்லயில் 30 தற்காலிக வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

மாவனெல்லயில் 30 தற்காலிக வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

மாவனெல்ல நகரில் 30 தற்காலிக வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவனெல்ல நகரின் பஸ் தரிப்பிடத்திற்கு பின்பகுதியில் உள்ள தற்காலிக கடைகளே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இரவு இடம்பெற்றுள்ளது.

பொலிஸார், தீயணைப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மாவனெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This