இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக சண்முகம் குகதாசன் தெரிவு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக சண்முகம் குகதாசன் தெரிவு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கான புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யும் கூட்டம் திருகோணமலையில் நேற்று (27) நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலையை சேர்ந்த சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டதாக கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார்.

எனினும், நாளை (28) நடைபெறவிருந்த கட்சியின் புதிய தலைவரின் பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட தலைவரான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யும் கூட்டம் திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது.

திருகோணமலை – திரியாய் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட சண்முகம் குகதாசன் அரச அறிவியல் துறையில் முதுநிலைப்பட்டதாரியாவார்

நீண்டகாலமாக கனடாவில் வசித்து வந்த சண்முகம் குகதாசன் 2020 ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளைத் தலைவராக இரண்டு சந்தர்ப்பங்களில் கடமையாற்றியுள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் சண்முகம் குகதாசன் போட்டியிட்டிருந்தார்

CATEGORIES
TAGS
Share This