மின் கட்டண திருத்தம் பெப்ரவரி நடுப்பகுதியில்!

மின் கட்டண திருத்தம் பெப்ரவரி நடுப்பகுதியில்!

இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண திருத்தம் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணத்தை திருத்தியமைப்பதில் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதனால் மின்சார வாரியம் முன்வைத்த முன்மொழிவு பொதுமக்களுக்கான கலந்தாய்வு நேற்று(23) ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This