பெலியத்தையில் துப்பாக்கிச் சூடு ; 5 பேர் பலி!

பெலியத்தையில் துப்பாக்கிச் சூடு ; 5 பேர் பலி!

மாத்தறை – பெலியத்தை பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி 4 பேர் உயிரிழந்துடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This