கடந்த 24 மணித்தியாலங்களில் 950 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் 950 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 950 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 42 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நால்வரின் சட்ட விரோத சொத்துகள் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கைதானவர்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையான 28 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில், 194 கிராம் ஐஸ் போதைப்பொருள், 296 கிராம் ஹெரோயின், 117 கிலோ 421 கிராம் கேரள கஞ்சா உள்ளிட்ட பல போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This