‘அவரின் அழகு, சக வீரர்களின் கவனத்தை சிதறடிக்கிறது’ – நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்ட வீராங்கனை?

‘அவரின் அழகு, சக வீரர்களின் கவனத்தை சிதறடிக்கிறது’ – நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்ட வீராங்கனை?

‘அவரது அழகு பிறரின் கவனத்தை சிதறடிக்கிறது’ எனக்கூறி சொந்த நாட்டு வீரர்களாலேயே பராகுவே நாட்டைச்சேர்ந்த நீச்சல் வீராங்கனை நாட்டிற்கு திரும்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பராகுவே நாட்டைச்சேர்ந்த 20 வயது நீச்சல் வீராங்கனையான லுவானா அலோன்சோ, பாரிஸ் ஒலிம்பிக்கில் தனது அழகால் பல இதயங்களை வென்றார். இந்நிலையில், அவரின் அழகு அவருடைய அணியில் உள்ள வீரர்களின் கவனத்தை சிதறடிப்பதாக கூறப்பட்டு, சொந்த நாட்டிற்கு அந்த வீராங்கனை திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது

இதை அந்த வீராங்கனை மறுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மனமுடைந்து அவர் தான் நீச்சலில் இருந்து ஓய்வு பெறுவதாக கண்ணீரோடு அறிவித்துள்ளார். இதையடுத்து இவ்விஷயம் பேசுபொருளாகியுள்ளது. இதில் என்ன நடந்தது என பார்க்கலாம்…

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100மீ பட்டர்பிளை நீச்சல் போட்டியில் பங்கேற்ற பராகுவே நாட்டின் 20 வயது வீராங்கனை லுவானா, காலிறுதிவரை முன்னேறி அரையிறுதியில் 0.24 வினாடிகளில் தோல்வியை சந்தித்தார். வீரர் வீராங்கனைகள் தோல்வியை சந்தித்திருந்தாலும் ஒலிம்பிக் கிராமத்தில் மற்ற வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக உடன் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

அப்படி சக நாட்டு வீரர்களுடன் தங்கியிருந்த லுவானா அலோன்சோ, தன்னுடைய அதிகப்படியான அழகால் மற்றவீரர்களின் கவனத்தை சிதறடிக்கிறார் என்று ஒரு இளம்வீரர் ஒருவர் தங்கள் நாட்டு ஒலிம்பிக் கமிட்டியில் புகாரளித்தார். இதையடுத்து, சொந்த நாட்டினாலேயே நாட்டிற்கு திரும்பும்படி லுவானா கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய பராகுவே ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரான லாரிசா ஷேரர், “அவரது இருப்பு பராகுவே அணிக்குள் பொருத்தமற்ற சூழ்நிலையை உருவாக்குகிறது. நாங்கள் அறிவுறுத்தியபடி விளையாட்டு வீரர்களின் கிராமத்தில் இரவைக் கழிக்காததால் நாங்கள் அவரை அனுப்பிவிட்டோம்” என்று தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வேறு காரணங்களை கூறும் அறிக்கைகள்..
உண்மையில் அதிகப்படியான அழகுடன் இருந்ததுதான் காரணமா என்ற கேள்வி எழும் நிலையில், அவரைப்பற்றிய மற்ற அறிக்கைகள் “அவர் வீரர்களை உற்சாகப்படுத்துவதை விடுத்து, தனது சொந்த விருப்பங்களுக்காக யாருக்கும் தெரியாமல் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து வெளியேறி வெளியில் சுற்றினார்” என தெரிவிக்கின்றன.

அதேபோல் “அவர் ஆடை அணியும் விதமும், பிறருடன் பழகும் விதமும் சிலருக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தியது என கூறப்படுகிறது” என்று டெய்லி மெயில் மேற்கோள் காட்டியுள்ளது.

CATEGORIES
Share This