குரோஷியாவில் முதியோர் இல்லத்தில் துப்பாக்கி சூடு- 6 பேர் பலி

குரோஷியாவில் முதியோர் இல்லத்தில் துப்பாக்கி சூடு- 6 பேர் பலி

குரோஷியா நாட்டின் தாருவார் நகரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு துப்பாக்கியுடன் நுழைந்த நபர் சரமாரியாக சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். உடனே அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார்.

துப்பாக்கி சூடு நடத்திய நபரை பொலிஸார் கைது செய்தனர். அவர் முன்னாள் இராணுவ வீரர் என்பதும் அவரது தாய் அந்த முதியோர் இல்லத்தில் 10 ஆண்டுகளாக வசித்து வந்தார் என்பதும் தெரியவந்தது. அந்த நபர் தனது தாயையும் சுட்டு கொன்றுள்ளார். தாக்குதலுக்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

அந்நாட்டு பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென் கோவிச் கூறும்போது, முதியோர் இல்லத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது ஒரு கொடூரமான செயல். இந்த குற்றத்தை நாங்கள் கண்டிக்கிறோம் என்றார்

CATEGORIES
Share This