துபாயில் பிரம்மாண்டமாக தயாராகும் கடற்கரை!

துபாயில் பிரம்மாண்டமாக தயாராகும் கடற்கரை!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சுற்றுலாத்துறைக்கு பெயர் பெற்ற நாடாக துபாய் பார்க்கப்படுகின்றது. நாள் தோறும் பல்லாயிரம் கணக்கான மக்கள் துபாயை சுற்றி பார்ப்பதற்காக மட்டும் வேறு நாடுகளிலிருந்து வருகிறார்கள்.

மேலும் மக்களை கவரும் வகையில் உலகின் மிக உயரமான கோபுரம், ஆடம்பரமான உணவகங்கள் மற்றும் தங்குவதற்கான ஹோட்டல்கள் என அட்டகாசமான இடங்களும் துபாயில் இருக்கின்றன.

அந்த வகையில் சுற்றுலா தளங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் புதிய திட்டத்தை துபாய் கையில் எடுத்துள்ளது. பொதுமக்களுக்காக 6.6 கிலோ மீட்டர் தூரம் கடற்கரையை உருவாக்க உள்ளது. அதில் நீச்சல் அடித்து கொண்டே துபாயின் அழகை ரசிக்க 2 கி.மீ வரை நீச்சல் குளமும் வரவுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களான தீம் பார்க்குகள் பல பொழுதுபோக்கு மண்டலங்கள் 330 ஹெக்டேர் பரப்பளவில் உருவாக உள்ளன.

இதனால் துபாய் மக்கள் மட்டுமின்றி மற்ற நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியுடன் இந்த சுற்றுலா தளத்தை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கினறனர்.

CATEGORIES
Share This