ஆப்கானிஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் நங்கர்ஹார் மாகாணத்திலுள்ள ஆற்றில் படகொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒரு ஆண், ஒரு பெண், 2 சிறுவர்கள் உட்பட 5 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த படகில் 26 பேர் பயணித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், விபத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
Share This