ரயில் மோதியதில் தாயும் இரு பிள்ளைகளும் பலி!

ரயில் மோதியதில் தாயும் இரு பிள்ளைகளும் பலி!

ரயில் மோதியதில் தாயும் இரு பிள்ளைகளும் பலியான துயரசம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று (19) பிற்பகல் கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோட்டர் சைக்கிள் மோதியதில் தாயும், இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்தனர்.

ஆராச்சிக்கட்டு, ஆணைவிழுந்தான், மய்யாவ புகையிரத கடவையில் இந்த சம்பவம் நடந்தது.

தாய், மகன், மகள் ஆகியோரே உயிரிழந்தனர்.

ஆராச்சிக்கட்டு, அடிப்பல பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஏ.எம்.ஷானிகா தில்ருக்ஷி, அவரது மூத்த மகன் 9 வயது கே.சசாத் மஞ்சுள மற்றும் 8 வயதுடைய மகள் சிசும்ஷா நெவிந்தி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

ஆராச்சிக்கட்டு பகுதியில் நடந்த மேலதிக வகுப்பில் இருந்து தனது மகளை அழைத்துக் கொண்டு வந்த போதே இந்த விபத்து நடந்தது.

புகையிரதத்தில் அடிபட்டு உயிரிழந்த தாய், மகன், மகள் ஆகியோரின் சடலங்கள் சுமார் 300 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே மூவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பல வாரங்களாக மய்யாவ புகையிரத கடவையில் காவலாளி இல்லை எனவும் முன்னாள் காவலர் சேவையில் இருந்து வெளியேறும் முன்னரே இது தொடர்பில் புகையிரத திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இது வரை புகையிரத கடவை காவலாளி நியமிக்கப்படவில்லை என்றும், அடிக்கடி விபத்துகள் நடக்கும் இந்த இடத்தை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தனது கணவடன் ஹலம்பவதவன பாடசாலைக்கு முன்பாக துணிக்கடை ஒன்றை நடத்தி வரும் பெண், அந்த இடத்திலிருந்து தமது மகளை அழைத்து வருவதற்காக சென்றிருந்ததாகவும், திரும்பி வரும் போது புகையிரதத்தில் மோதியதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

மகனுக்கு மேலதிக வகுப்புக்கள் இல்லையென்றாலும், தாயுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதாகவும் கூறுகிறார்.

விபத்தில் உயிரிழந்த தாய், மகன் மற்றும் மகள் ஆகியோரின் சடலங்கள் விபத்துக்குள்ளான அதே ரயிலில் முந்தல் புகையிரத நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் வேறு வாகனத்தில் சடலங்களை மீண்டும் ஹலவத்தை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This