2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆரம்பம்!

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆரம்பம்!

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக நௌஃபர் மவ்லவி மற்றும் 24 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகளான தமித் தொட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் 25 பிரதிவாதிகள் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

நௌபர் மவ்லவி, சஜித் மவ்லவி, மொஹமட் மில்ஹான், சாதிக் அப்துல்லா, ஆதம் லெப்பே, மொஹமட் சனஸ்தீன் மற்றும் மொஹமட் ரிஸ்வான் உட்பட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ், பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவியமை, சதி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் கொலைக்கு சதி செய்தல், உதவி செய்தல், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சேகரித்தல் மற்றும் கொலை முயற்சி ஆகியவையும் அடங்குகின்றன.

CATEGORIES
Share This