

வரலாற்றில் இன்று – மார்ச் 26: கொழும்பில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின – 2007


1812 – வெனிசுவேலாவின் கரகஸ் நகர் 7.7 அளவு நிலநடுக்கத்தில் அழிந்தது.
1871 – இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்.
1872 – கலிபோர்னியாவில் லோன் பைன் என்ற இடத்தில் 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.
1913 – முதலாம் பால்கன் போர்: பல்கேரியப் படைகள் ஆட்ரியானாபோல் நகரைக் கைப்பற்றின.
1917 – முதலாம் உலகப் போர்: காசாப் பகுதியில் இடம்பெற்ற முதலாவது சமரில் பிரித்தானியப் படைகளின் முன்னேற்றம் சுமார் 17,000 துருக்கியர்களால் தடுக்கப்பட்டது.
1934 – ஐக்கிய இராச்சியத்தில் வாகன ஓட்டுனர்களுக்கான சோதனை அறிமுகப்படுத்தப்பட்டது.
1939 – எஸ்ப்பானிய உள்நாட்டுப் போர்: தேசியவாதிகள் தமது இறுதித் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் அவுஸ்விட்சு வதை முகாமிற்கு முதற்தடவையாக பெண் சிறைக்கைதிகள் கொண்டு செல்லப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானுடனான இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்ததாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது.
1954 – மார்சல் தீவுகளில் உள்ள பிக்கினி திட்டில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
1958 – ஐக்கிய அமெரிக்க இராணுவம் எக்ஸ்புளோரர் 3 விண்கலத்தை ஏவினர்.
1971 – கிழக்கு பாகிஸ்தான் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. வங்காளதேச விடுதலைப் போர் ஆரம்பமானது.
1979 – அன்வர் சாதாத், மெனசெம் பெகின், ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் வாசிங்டனில் எகிப்திய-இஸ்ரேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
1991 – அர்கெந்தீனா, பிரேசில், உருகுவை, பரகுவை ஆகிய நாடுகள் தெற்கத்திய பொதுச் சந்தையை உருவாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1997 – சுவர்க்கத்தின் வாயில் என்ற மதக் குழுவில் தற்கொலை செய்துகொண்ட 39 பேரின் உடல்கள் கலிபோர்னியாவில் கண்டெடுக்கப்பட்டன.
1998 – அல்ஜீரியாவில் 2 அகவைக்குட்பட்ட 32 குழந்தைகள் உட்பட 52 பேர் கத்திகளாலும் வாள்களாலும் வெட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
2000 – விளாடிமீர் பூட்டின் உருசியாவின் அரசுத்தலைவராகத் தெரிவானார்.
2005 – தமிழீழ தேசிய தொலைக்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்.
2005 – சீனாவின் பிரிவினைக்கு எதிரான சட்டத்திற்கெதிராக 200,000 முதல் 300,000 வரையான தாய்வான் மக்கள் தாய்பெய் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2006 – மியான்மாரின் புதிய தலைநகராக நாய்பிடோ என்ற புதிய நகரம் இராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது.
2006 – முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது.
2007 – கொழும்பில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
2010 – தென் கொரியாவின் கடற்படைப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது. 46 மாலுமிகள் உயிரிழந்தனர்.
2015 – சவூதி அரேபியா யெமன் மீதான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. இந்நடவடிக்கையில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டனர்.