கிழக்கு சிரியாவில் அமெரிக்க இராணுவம் வான்வழித்தாக்குதல்!

கிழக்கு சிரியாவில் அமெரிக்க இராணுவம் வான்வழித்தாக்குதல்!

கிழக்கு சிரியாவில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளை குறித்து அமெரிக்கா இராணுவம் நேற்று வான்வழி தாக்குதலை நடத்தியது. எனினும் இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.

சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவதற்காக சிரியா இராணுவத்துக்கு பக்கபலமாக அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டுள்ளன. அந்தவகையில் கிழக்கு சிரியாவின் ஹசாக்கா பகுதியில் அமெரிக்க இராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த இராணுவ தளம் மீது நேற்று முன்தினம் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் டிரோன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அமெரிக்க இராணுவ தளத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 6 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This