நாட்டிற்காக எந்த விலையும் கொடுக்கத் தயார் – ராகுல் காந்தி

நாட்டிற்காக எந்த விலையும் கொடுக்கத் தயார் – ராகுல் காந்தி

தன் மீதான நடவடிக்கை குறித்து ராகுல் காந்தி முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

“இந்தியாவின் குரலுக்காக போராடிக்கொண்டிருக்கிறேன். இதற்காக எந்த விலையையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்” என ராகுல் ட்வீட் செய்துள்ளார்.

ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து அவர் வெற்றி பெற்ற கேரளாவின் வயநாடு தொகுதி காலியாக உள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

எனவே, அந்த தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்க முடியும். டெல்லியில் உள்ள அரசு பங்களாவை ராகுல் காந்தி காலி செய்ய வேண்டிய நிலையும் உள்ளது.

CATEGORIES
TAGS
Share This